
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ராஜஸ்தான் தரப்பில் நந்த்ரே பர்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.