
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் டெர்பியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைப்பெற்ற அரையிறுதியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 7 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறியது:
“நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கெளர் 171 ஓட்டங்கள் குவித்ததை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
ஹர்மன்பிரீத் கௌர், இந்திய கேப்டன் மிதாலி ராஜ், இந்திய வீராங்கனைகள் ஆகியோருக்கு பிசிசிஐ சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
இந்திய அணி உலகக் கோப்பையோடு நாடு திரும்ப வேண்டும் என நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.