
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் பதக்கங்களை குவித்துவருகிறது இந்தியா.
காமன்வெல்த்தில் இதுவரை இந்தியா 6 பதக்கங்களை வென்றுள்ளது. அந்த 6 பதக்கங்களும் பளுதூக்குதலிலேயே கிடைத்துள்ளன.
பளுதூக்குதலில் மீராபாய் சானு, ஜெர்மி மற்றும் அச்சிந்தா ஷூலி ஆகிய மூவரும் தங்கம் வென்றனர். சங்கேத் சர்கார் மற்றும் பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளி பதக்கம் வென்றனர். குருராஜா வெண்கலம் வென்றார்.
இந்நிலையில், 7வது பதக்கத்தை லான் பௌல்ஸ் விளையாட்டில் உறுதி செய்துள்ளது இந்திய மகளிர் அணி. லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. அபாரமாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது.
ஃபைனலில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஃபைனலுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஃபைனலில் ஜெயித்தால் தங்கம், தோற்றால் வெள்ளி பதக்கம் உறுதி.
காமன்வெல்த்தில் லான் பௌல்ஸில் முதல் முறையாக பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.