
உலகக் கோப்பை வலைகோல் பந்தாட்ட்ப் போட்டிக்கு முதல் முறையாக சீனா அணி தகுதிபெற்று வரலாறு படைத்து அசத்தியுள்ளது.
சர்வதேச வலைகோல் பந்தாட்ட சம்மேளன விதிகளின்படி, கண்டங்களில் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
இந்தாண்டில் இலண்டனில் நடைபெற்ற "வலைகோல் பந்தாட்ட உலக லீக் அரையிறுதி போட்டியில் 8-வது இடம் பிடித்த சீனாவுக்கும், 9-வது இடம் பிடித்த தென் கொரியாவுக்கும் இடையே உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை பெறுவதற்கான போட்டி நடைப்பெற்றது.
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்ட போட்டியில் வெல்வது தென் கொரியாவுக்கான கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால், சூப்பர் 4 ஸ்டேஜ் சுற்றில் மலேசியா - தென் கொரியா இடையேயான ஆட்டம் 1-1 என சமனானதால் அதிக புள்ளிகள் பெற்றிருந்த மலேசியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறிற்று.
தென் கொரியா தனது கடைசி வாய்ப்பை இழந்ததால், உலகக் கோப்பை போட்டியில் சீனா பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டியில் 15-வது அணியாக சீனா தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.