
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடந்துவந்த நிலையில், இன்றுடன் போட்டிகள் முடிவடைந்தன. மாலை 6 மணிக்கு தொடங்கி நிறைவு விழா நடக்கிறது.
செஸ் ஒலிம்பியாடில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் இந்தியா ஏ, பி, சி மற்றும் மகளிர் பிரிவில் ஏ, பி, சி என 6 அணிகள் கலந்துகொண்டு ஆடின.
ஆனால் ஓபன் பிரிவில் இந்தியா பி மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா ஏ ஆகிய 2 அணிகள் மட்டுமே பதக்கங்களை வென்றன. இந்தியா ஓபன் பி அணியும், இந்தியா மகளிர் ஏ அணியும் வெண்கலம் வென்றன.
தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹால் சரின் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். அர்ஜுன் எரிகாசி வெள்ளி வென்றார்.
பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.