
ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை தோனி தலைமையில் மீண்டும் களம் காண்கிறது. இதையடுத்து சென்னை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களை சென்னை அணி ஏற்கனவே தக்கவைத்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடந்துவருகிறது.
இன்றைய ஏலத்தில், டுபிளெசிஸ், டிவைன் பிராவோ ஆகிய வீரர்களை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி சென்னை அணி தக்கவைத்தது.
இந்திய ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவை ரூ.7.8 கோடிக்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கும் சென்னை அணி எடுத்தது.
எனவே அஷ்வினுக்கு மாற்றாக ஹர்பஜன் சிங்கை ரூ.2கோடிக்கு சென்னை அணி எடுத்தது.
இதுவரை நடந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள்:
டுபிளெசிஸ், பிராவோ, ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.