
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் தனது முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆண்டனி எஸ்கோஃபீர் மற்றும் இந்தியாவின் சுமித் நாகல் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆண்டனி எஸ்கோஃபீர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சுமித் நாகலை வீழ்த்தினார்.
இதர ஆட்டங்களில் தென் கொரியாவின் லீ டக் ஹீ 6-3, 6-4 என்ற செட்களில் இந்தியரான விஜய் சுந்தர் பிரசாந்தை வீழ்த்தினார்.
எகிப்தின் முகமது சஃப்வத் 6-4, 6-3 என்ற செட்களில் இத்தாலியின் அலெஸான்ட்ரோ பெகாவையும் வீழ்த்தினார்.
இதனிடையே, தகுதிச்சுற்று வீரர்களான இந்தியாவின் அர்ஜூன் காதே, சித்தார்த் ராவத், தாய்லாந்தின் விஷ்வயா ஆகியோர் தங்களது முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றனர்.
இருப்பினும், வைல்டு கார்டு வீரர்களான நிதின் குமார் சின்ஹா, தக்ஷினேஷ்வர் சுரேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.