
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ஹர்மன்பிரீத் கெளர் உள்ளிட்ட வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கி சிறப்பித்தது.
சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ விருதுகள் வழங்குகிறது. அதன்படி, பிசிசிஐ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில், கடந்த 2016-17, 2017-18 என இரு சீசன்களுக்கான சிறந்த வீரர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அதேபோன்று, மகளிர் கிரிக்கெட் அணியில் 2016-17 சீசனுக்கு ஹர்மன்பிரீத் கெளர், 2017-18 சீசனுக்கு ஸ்மிருதி மந்தானா ஆகியோர் சிறந்த வீராங்கனைகளுக்கான விருதுகளை பெற்றனர்.
மேலும், முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் 4 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம், டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த வீரர்கள் ஜலாஜ் சக்சேனா, பர்வேஸ் ரசூல், கருணால் பாண்டியா, ஆகியோரும் சிறந்த ஆல் ரௌண்டர்கள், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் உள்ளிட்ட விருதுகளை பெற்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.