
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் விளையாட போகும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என்று பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அறிவித்துள்ளார்.
42 வயதான, மிஸ்பா உல் ஹக், 2010 முதலே பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். மிஸ்பா தலைமையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. இது அவருடைய மிகப் பெரிய சாதனையாகும்.
பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் செய்தியாளர்களுக்கு நேற்றுத் தெரிவித்தது:
“சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் விளையாட போகும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர். அதேசமயத்தில் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை பின்னர் முடிவு செய்வேன்' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.