அடுத்தடுத்து விக்கெட்டுகள்.. தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடும் புவனேஷ்வர் குமார்!!

 
Published : Jan 05, 2018, 03:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
அடுத்தடுத்து விக்கெட்டுகள்.. தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடும் புவனேஷ்வர் குமார்!!

சுருக்கம்

bhuvaneshvar kumar took 3 wickets of south africa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் அசத்தினார்.

இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தொடர்களையும் வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸிஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர் மற்றும் மார்க்ராம் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே எல்கரை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், அதற்கடுத்து 5 ரன்களில் மார்க்ரமையும் 3 ரன்களில் ஹாசிம் ஆம்லாவையும் வெளியேற்றினார். 13 ரன்களுக்கே முதல் மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க அணி இழந்தது.

எனினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளெஸிஸ் ஜோடி நிதானமாக ஆடிவருகிறது. 15 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸும் டுபிளெஸிசும் களத்தில் உள்ளனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா