புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸை முட்டிச் சாய்த்தது பெங்களூரு புல்ஸ்…

Asianet News Tamil  
Published : Aug 10, 2017, 08:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸை முட்டிச் சாய்த்தது பெங்களூரு புல்ஸ்…

சுருக்கம்

Bengaluru bulls defeated the Bengal Warriors in Pro kabaddi

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 20-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 20-வது ஆட்டம் நாகபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார் தனது ரைடின் முதல் புள்ளியைக் கைப்பற்றினார்.

பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் புள்ளியைப் பெற 3-வது நிமிடம் வரை எடுத்து கொண்டது. அந்த அணியின் மணீந்தர் சிங் தனது ரைடின் முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

4-வது நிமிடத்தின் முடிவில் பெங்களூரு அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற, 10-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது பெங்கால்.

இதன்பிறகு பெங்கால் ரைடர் குன் லீ அபாரமாக ஆட, அந்த அணி 8-6 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரு அணியும் அபாரமாக ஆட, அசத்தலான டேக்கிள் மூலம் ஸ்கோரை (9-9) சமன் செய்தது பெங்களூரு அணி.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 12-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்கோரை (12-12) சமன் செய்தது பெங்கால் அணி. 23-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை ஆல் அவுட்டாவதிலிருந்து காப்பாற்றினார் ஹரீஷ்.

27-வது நிமிடத்தில் இரு அணிகளும் 16-16 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன. 28-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் அஜய் குமார் சூப்பர் ரைடின் மூலம் 4 புள்ளிகளைப் பெற, அதுவே திருப்பு முனையாக அமைந்தது. இதனால் பெங்களூரு அணி 20-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

30-ஆவது நிமிடத்தில் பெங்கால் அணியை ஆல்அவுட்டாக்கிய பெங்களூரு அணி 24-18 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசிக் கட்டத்தில் பெங்கால் அணி போராடினாலும், புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடிந்ததேயொழிய தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.

இறுதியில் பெங்களூரு வாரியர்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடி 3-வது வெற்றியைப் பெற்றுள்ள பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேநேரத்தில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கும் பெங்கால் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!