
பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி - சுமித் நாகல் அரையிறுதியில் மோதுகின்றனர்.
பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்லோவேனியாவின் பிளேஸ் காவ்சிச் மற்றும் சுமித் நாகல் மோதினர்.
இதில், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிளேஸ் காவ்சிச்சை வீழ்த்தினார் சுமித் நாகல்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி சக நாட்டவரான பிரஜனேஷ் கன்னேஸ்வரனுடன் மோதி அவரை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
அதன்படி, அரையிறுதியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி - சுமித் நாகல் மோதுகின்றனர்
இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் சங் ஹுவா யாங் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ஆன்டணி எஸ்கோஃபியரை வீழ்த்தினார்.
மேலும், ஒரு காலிறுதியில் குரோஷியாவின் ஆன்டே பாவிச்சை 6-2, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பிரிட்டனின் ஜேய் கிளார்க், அரையிறுதியில் சங் ஹுவா யாங்கை எதிர்கொள்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.