இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் ஒப்பந்தம் கையெழுத்தானது...

Asianet News Tamil  
Published : May 12, 2018, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் ஒப்பந்தம் கையெழுத்தானது...

சுருக்கம்

Badminton game to the next level in India dealing was signed ...

இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் மற்றும் யோனெக்ஸ் சன்ரைஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய பாட்மிண்டன் சம்மேளனத் தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "ரூ.75 கோடி அளவுக்கு இந்த ஒப்பந்தம் யோனெக்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டு உள்ளது. 

இதன்மூலம் இந்திய பாட்மிண்டன் சங்கம் நடத்தும் அனைத்து போட்டிகள், முகாம்கள், அகாதெமிகளுக்கு தேவையான உபகரணங்களை அந்நிறுவனம் விநியோகம் செய்யும். 

அதற்கு பதிலாக பல்வேறு போட்டிகளின் பெயர்கள் விளம்பர உரிமை யோனெக்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும்.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும். இது கூட்டமைப்பின் நிலைமையையும் வலிமைப்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?