
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தப் போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கைர்ஜிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் முக்கிய வீராங்கனையாக சாக்ஷி மாலிக் கலந்து கொண்டு அசத்த இருக்கிறார். மேலும், வினேஷ் போகத், ரீது போகத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் பிரிவில் ஒலிம்பிக் வீரர் சந்தீப் தோமர், பஜ்ரங் பூனியாவுடன், ஜிதேந்தர், சாக்ஷி மாலிக் கணவர் சத்யவர்த் கடியான் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் என ஒன்பது பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.