16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; பாகிஸ்தான், சீனா பங்கேற்பது உறுதி!

Published : Apr 25, 2023, 09:32 AM IST
16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; பாகிஸ்தான், சீனா பங்கேற்பது உறுதி!

சுருக்கம்

சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் நடக்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. 7ஆவது முறையாக நடக்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்காக சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

கொல்கத்தாவை விரட்டியடித்து நம்பர் ஒன் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான உறவு காரணமாக இந்த ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகள் பங்கேற்பது உறுதியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ஹாக்கி போட்டியில் சீனா பங்கேற்பது கடந்த ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 முறை சாம்பியனான பாகிஸ்தானும் நேற்று ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

ஐபிஎல்லில் கொடிகட்டி பறக்கும் OLD IS GOLD ஆக தங்களது திறமையை நிரூபிக்கும் சீனியர்ஸ்!

இந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியானது இரண்டு சுற்றுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அப்படி பார்க்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதும் என்று தமிழ்நாடு ஹாக்கி பிரிவு தலைவர் சேகர் ஜெ மனோகரன் கூறியுள்ளார். இந்த போட்டி குறித்து இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி ஒரு முன்னோட்டமாக (லிட்டன் டெஸ்ட்) இருக்கும். வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பாகவும் இந்தப் போட்டி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
CSK SWOT Analysis: 6-வது முறையா கோப்பையை அடிக்குமா சிஎஸ்கே? முழு பலம், பலவீனம் இதோ!