
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இன்று வில்வித்தை போட்டி நடந்தது. வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடி, தென் கொரியாவின் சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடியை 159 -158 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலமாக வில்வித்தையில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கமாகும்.
மற்றொரு போட்டியில் தடகள வீரர்கள் ராம் பாபூ மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் 35 கிமீ ரேஸ்வாக்கில் வெண்கல பதக்கத்தை வென்றனர் (கலப்பு அணி). இதன் மூலமாக இந்தியா 16 தங்கம் 26 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் கைப்பற்றி 71 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. சீனா, 164 தங்கம் 90 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் 300 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்திலுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.