அதிரடி ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது இலங்கை…

Asianet News Tamil  
Published : Feb 20, 2017, 10:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
அதிரடி ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது இலங்கை…

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிப் பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிரடி ஆட்டத்தால் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி, தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 173 ஓட்டங்ககள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் மோசஸ் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 56, மைக்கேல் கிளிங்கர் 43 ஓட்டங்ககள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் குலசேகரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் அதிரடியாக ஆடிய குணரத்னே 46 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்ககள் குவித்தார்.

இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்ககள் குவித்து வெற்றிப் பெற்றது.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் குணரத்னே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL பைனல் பெங்களூருவில் நடக்காது.... பிளே ஆஃப் அட்டவணையில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்