க்ருணல் பாண்டியாவை தொடர்ந்து மேலும் 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்..!

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 2:44 PM IST
Highlights

க்ருணல் பாண்டியாவை தொடர்ந்து யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் முடிந்துவிட்டது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணியும், டி20 தொடரை இலங்கை அணியும் வென்றன.

2வது டி20 போட்டிக்கு முன்பாக இந்திய வீரர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த 26ம் தேதி நடக்க வேண்டிய 2வது டி20 போட்டி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டது. 27ம் தேதி 2வது டி20யும், 28ம் தேதி 3வது டி20யும் நடந்தன.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட க்ருணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அப்படி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஸ்பின்னர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 
 

click me!