
மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் யுபி வாரியர்ஸை இன்றைய போட்டியில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆர்சிபி அணி:
ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, சஹானா பவார், கோமல் ஜான்ஸத், ரேணுகா சிங்.
ICC WTC ஃபைனலுக்கு முன்னேறியே தீரணும்.. நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
யுபி வாரியர்ஸ் அணி:
அலைஸா ஹீலி (கேப்டன்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிர், டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனை டிவைன் மற்றும் எலைஸ் பெர்ரி ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினார்கள். கேப்டன் ஸ்மிரிதி மந்தனா வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அபாரமாக ஆடிய எலைஸ் பெர்ரி அரைசதம் அடித்தார். 39 பந்தில் பெர்ரி 52 ரன்களும், டிவைன் 24 பந்தில் 36 ரன்களும் அடித்தனர். 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியும் கூட மற்ற அனைவருமே சொதப்பியதால் அந்த அணி 20 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே அடித்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்
139 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான தேவிகா வைத்யாவும் ஹீலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் ஆடினார். அதிரடியாக ஆடிய அலைஸா ஹீலி 46 பந்தில் 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 96 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 139 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.