IPL Auction 2022: 2021ல் ரூ.75 லட்சம்.. 2022ல் ரூ.11.50 கோடி..! லிவிங்ஸ்டோனுக்கு ஏன் இத்தனை கோடி..?

Published : Feb 13, 2022, 04:47 PM IST
IPL Auction 2022: 2021ல் ரூ.75 லட்சம்.. 2022ல் ரூ.11.50 கோடி..! லிவிங்ஸ்டோனுக்கு ஏன் இத்தனை கோடி..?

சுருக்கம்

2021 ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்துக்கு விலைபோன இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு விலைபோனார். இவ்வளவு பெரிய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் என்ன காரணம் என்பதை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதுவரை நடந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோனவர் இந்திய வீரர் இஷான் கிஷன். ரூ.15.25 கோடிக்கு அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. தீபக் சாஹரை அவர் ஏற்கனவே ஆடிய சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது.

வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2வது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்.

இந்த ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.11.50 கோடிக்கு விலைபோனது அனைவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.75  லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன், இந்த முறை 5 அணிகளால் போட்டி போடப்பட்டு கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. 

லியாம் லிவிங்ஸ்டோனுக்கு ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்ட, சிஎஸ்கேவிற்கும் கேகேஆருக்கும் இடையே போட்டி நிலவியது. சிஎஸ்கே ஒரு கட்டத்தில் விலகிக்கொள்ள ரூ.4 கோடிக்கு மேல் கேகேஆருடன் பஞ்சாப் கிங்ஸ் போட்டி போட்டது. கேகேஆரும் பஞ்சாப் கிங்ஸும் அடித்துக்கொள்வதை பார்த்து, குஜராத் டைட்டன்ஸும் இந்த போட்டியில் இணைந்தது. ஆனால் எத்தனை அணிகள் போட்டிக்கு வந்தாலும் லிவிங்ஸ்டோனை விட்டுக்கொடுக்க விரும்பாத பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.11.50 கோடிக்கு எடுத்தது. 

ஒரே ஆண்டில் அவரது மதிப்பு இந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் அவரது அதிரடியான பேட்டிங்கும், பன்முக பந்துவீசும் திறமையும் தான். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆடியபோது இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டோன், 43 பந்தில் 103 ரன்களை குவித்து மிரட்டினார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடியவர் மட்டுமல்லாது, எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆடக்கூடியவர் லிவிங்ஸ்டோன். மேலும் லெக் ஸ்பின்னரான இவர், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின்னும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் ஆஃப் ஸ்பின்னும் என பேட்ஸ்மேன்களை பொறுத்து பந்தை மாற்றி வீசக்கூடியவர்.

மேலும், பஞ்சாப் அணியின் ஆய்வாளர்களில் ஒருவராக இருக்கும் டான் வெஸ்டன், பிர்மிங்காம் அணியில் லிவிங்ஸ்டோனின் திறமையை நன்கு அறிந்தவர் என்பதால், அவரது உள்ளீடு இருந்திருக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!