ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கக்கூடாது..! வாசிம் ஜாஃபர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 9, 2021, 4:41 PM IST
Highlights

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகக்கூடாது என்று வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கி கொடுத்த ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தற்போது இருந்துவருகிறார்.

இந்நிலையில் தான், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சென்றுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாகத்தான் ராகுல் டிராவிட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது அமைந்திருக்கிறது. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இலங்கைக்கு சென்றுள்ளார். இளம் வீரர்களுக்கு இது மிக நன்மையளிக்கும். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து நீடித்து, அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியில் தொடர்ச்சியாக பல திறமையான இளம் வீரர்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். அதனால் அவரை இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக்க நிர்பந்திக்கக்கூடாது. சர்வதேச அளவில் ஆடும் வீரர்கள் முழுமையாக தயாராகிவிட்ட வீரர்கள். எனவே இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் டிராவிட் தொடர வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
 

click me!