இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 15, 2019, 12:42 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 
 

உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டி வரும் 16ம் தேதி நடக்கவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. 

எனவே முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டி. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் வீரர்கள் ஆக்ரோஷத்தை அடக்கினால் இந்திய அணியை வீழ்த்தலாம். இந்திய அணி வலுவான அணிதான். பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை திறம்பட எதிர்கொள்ள முடியும். இந்திய அணி வலுவானதாக இருந்தாலும் உலக கோப்பையை பொறுத்தமட்டில் எந்த அணி நெருக்கடியை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணி தான் வெல்லும் என வாசிம் அக்ரம் தெரிவித்தார். 
 

click me!