#PBKSvsRR எந்த அணி வெல்லும்? கிரிக்கெட்டில் கணிப்புகள் செல்லாது! ஆனாலும் சொல்றேன் அந்த அணிதான் வெல்லும்-சேவாக்

By karthikeyan VFirst Published Sep 21, 2021, 6:56 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

துபாயில் இன்று நடக்கும் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலுமே வெளிநாட்டு வீரர்கள் பலர் வெளியாகியிருப்பதால், புதிய வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை ஆகியோர் விலகிய நிலையில், பஞ்சாப் அணியில் ஜெய் ரிச்சர்ட்ஸன், ரிலே மெரிடித் ஆகிய வீரர்கள் விலகினர்.

இந்த சீசனின் முதல் பாகத்தின் முடிவில் இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளையும் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுமே பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி அவசியம் என்ற சூழலில் இன்று மோதுகின்றன. 

இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும் நிலையில், இந்த போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் ஆடவில்லை. ஆனால் லிவிங்ஸ்டோன் டி20 லீக் தொடர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். பஞ்சாப் அணியில் கெய்ல், பூரன், ராகுல், மயன்க், தீபக் ஹூடா ஆகிய அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். பூரன் போட்டியை முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கிரிக்கெட்டில் கணிப்புகள் பொய்த்துப்போகும். ஆனாலும், இந்த போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று கேட்டால், நான் பஞ்சாப் கிங்ஸ் தான் என்பேன் என்றார் சேவாக்.
 

click me!