புல்டாஸ் பந்தில் அவுட்டான கோலி, நோபால் கேட்டு நடுவருடன் வாக்குவாதம்: வீடியோ வைரல்!

Published : Apr 21, 2024, 07:15 PM IST
புல்டாஸ் பந்தில் அவுட்டான கோலி, நோபால் கேட்டு நடுவருடன் வாக்குவாதம்: வீடியோ வைரல்!

சுருக்கம்

புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்த நிலையில் நோபால் கேட்டு இல்லையென்று தெரிய ஏமாற்றத்துடன் வெளியேறிய விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 36ஆவது லீக் போட்டி தற்போது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 48 ரன்கள் எடுத்தார்.

 

 

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் யாஷ் தயாள் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி 204 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 223 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுண்டரியுடன் விராட் கோலி தனது இன்னிங்ஸை தொடங்கினார். முதல் ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். கடைசி பந்தில் சிக்ஸர் உள்பட இந்த ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. 3ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். முதல் பந்தை புல்டாஸ் ஆக வீசினார். ஆனால், இறங்கி அடிக்க முயற்சித்த கோலி, அவரிடமே கேட்ச் கொடுத்தார். அதன் பிறகு பந்துக்கு இடுப்புக்கு மேல் வந்ததாக கூறி நோபால் கேட்டு ரெவியூ எடுத்தார்.

 

 

ஆனால், அவர் கிரீஸை விட்டு இறங்கி வந்த நிலையில், பந்து ஸ்டெம்பிற்கு மேல் சிறிது இடைவெளியில் இறங்கி வந்தது தெரியவர நோபால் இல்லை என்றும், அவுட் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏமாற்றத்துடன் நடையை கட்டிய கோலி கள நடுவருடன் ஆக்ரோஷமாக பேசிய நிலையில், அங்கிருந்து நடையை கட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!