விராட் கோலியை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகள்..! கோலி மகளை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள்

Published : Jan 24, 2022, 01:45 PM IST
விராட் கோலியை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகள்..! கோலி மகளை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள்

சுருக்கம்

விராட் கோலியின் மகள் முகத்தை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள், விராட் கோலியை அப்படியே உரித்து வைத்தாற்போல் உள்ள அவரது மகளின் முகத்தை பார்த்து ரசித்துவருகின்றனர்.  

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வாமிகா என்று கோலி - அனுஷ்கா தம்பதி பெயர் சூட்டியது.

பிறந்ததிலிருந்து தங்கள் மகள் வாமிகாவின் முகத்தை பொதுவெளியில் காட்டாமலேயே இருந்தனர் கோலி - அனுஷ்கா. குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்போது முன்கூட்டியே குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் - கேமராமேன்களிடம் கோரிக்கை வைத்துவிடுவார்கள். கேமராமேன்களும் அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்து புகைப்படம் எடுக்காமல் தவிர்த்துவந்தார்கள்.

இதுவரை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ தங்கள் மகளின் முகத்தை காட்டாமல் இருந்துவந்த கோலி - அனுஷ்கா தம்பதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது முதல் முறையாக வாமிகாவின் முகத்தை காட்டினர்.

இந்த  போட்டியை அனுஷ்கா சர்மா மகளுடன் பெவிலியனில் இருந்து கண்டுகளித்தார். கோலி இந்த போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 65 ரன்கள் அடித்தார் கோலி. கோலி அரைசதம் அடித்ததும், அந்த அரைசதத்தை தனது மகளுக்கு அர்ப்பணிப்பதாக சைகையில் தெரிவித்தார். அப்போது பெவிலியனில் அனுஷ்கா சர்மா மகளுடன் நின்றார். அப்போதுதான் வாமிகாவின் முகம் முதல் முறையாக பொதுவெளியில் காட்டப்பட்டது.

அப்படியே விராட் கோலியை உரித்து வைத்திருக்கும் அவரது மகளை முதல் முறையாக கண்ட ரசிகர்கள், அப்பா - மகளின் புகைப்படத்தை ஒப்பிட்டு ரசித்துவருகின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!