2 டி20 போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா!! உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 27, 2019, 10:02 AM IST
Highlights

இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி சில அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் கடுமையாக போராடிய இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி சில அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது. 

முதல் போட்டியில் தவானுக்கு பதிலாக கேல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரைசதம் அடித்தார் ராகுல். அந்த போட்டியில் ராகுல் மட்டுமே இந்திய அணியில் நன்றாக பேட்டிங் ஆடினார். மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் 3 ரன்களில் ரன் அவுட்டானார். 

வெறும் 126 ரன்களை எடுத்த இந்திய அணி, அந்த எளிய இலக்கை எளிதாக எட்டவிடாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதம் அந்த அணிக்கு இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தது. அதனால் கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றியை பறித்தது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக சில மாற்றங்கள் செய்யப்படும். விஜய் சங்கர் அணியில் கண்டிப்பாக சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை முதல் போட்டிக்கு பிறகான கேப்டன் கோலியின் பேச்சு உணர்த்தியது. உலக கோப்பைக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என கோலி தெரிவித்திருந்தார். எனவே ரிஷப் பண்ட் நீக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. அதனால் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படலாம்.

அதேபோல முதல் போட்டியில் கடைசி ஓவரில் சொதப்பிய உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்படலாம். ஏனெனில் கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரை அருமையாக வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. ஆனால் பும்ராவின் கடும் உழைப்பில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் கடைசி ஓவரை படுமோசமாக வீசி தோல்வியை தேடிக்கொடுத்தார் உமேஷ் யாதவ். அதுமட்டுமல்லாமல் தொடக்கம் முதலே உமேஷ் யாதவ் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வீசவில்லை. ரன்களை வாரி வழங்கிக்கொண்டேதான் இருந்தார். எனவே அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்படுவார். 

அந்த வகையில், தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் விஜய் சங்கர் மற்றும் உமேஷ் யாதவிற்கு பதில் சித்தார்த் கவுல் ஆகிய 2 மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும். 

உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித், ராகுல், ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், குருணல் பாண்டியா, சாஹல், மார்கண்டே, பும்ரா, கவுல்.
 

click me!