உன்னையெல்லாம் ஓரமா உட்கார வச்சாதான் வலி புரியும்!! அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 10, 2019, 10:30 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. அனைத்து போட்டிகளிலுமே சொதப்பிவிட்டார். அதிலும் ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் 10 பந்துகளுக்கு ரன்னே அடிக்கவில்லை. முதல் ரன்னை அடிக்கவே திணறினார். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால் உலக கோப்பை அணியில் பரிசீலனையில் இருக்கும் சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. 

முதல் மூன்று போட்டிகளில் அப்படியான வாய்ப்பு எதுவும் யாருக்கும் அளிக்கப்படவில்லை. மூன்று போட்டிகளிலும் ஒரே அணி தான் ஆடியது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் இன்று மொஹாலியில் நான்காவது ஒருநாள் போட்டியும் 13ம் தேதி டெல்லியில் கடைசி ஒருநாள் போட்டியும் நடக்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை வாய்ப்பளிக்கப்படாத ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு கடைசி இரண்டு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. 

இதை மூன்றாவது போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் கோலி உறுதி செய்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி எஞ்சிய இரண்டு போட்டிகளில் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக ராகுல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஷிகர் தவான் தொடர்ந்து சொதப்பிவருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. அனைத்து போட்டிகளிலுமே சொதப்பிவிட்டார். அதிலும் ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் 10 பந்துகளுக்கு ரன்னே அடிக்கவில்லை. முதல் ரன்னை அடிக்கவே திணறினார். 

தவான் ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்புதான் என்றாலும் ராகுல் ஃபார்மில் இருப்பது பலம். டி20 தொடரில் அருமையாக ஆடினார் ராகுல். ராகுல் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்பட இருப்பதால் அதற்கு முன்னதாக இந்த கடைசி போட்டிகள் மட்டுமே இருப்பதால் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

கடைசி 2 போட்டிகளில் தோனி ஆடாதது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைவார். அதேபோல விஜய் சங்கரின் பேட்டிங் ஆர்டர் புரமோட் செய்யப்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது போட்டியில் ஷமிக்கு காலில் அடிபட்டது. எனினும் அவர் முழுமையாக 10 ஓவரையும் வீசினார். அவரது முழு உடற்தகுதி அணிக்கு முக்கியம். அதேநேரத்தில் முதல் 2 போட்டிகளில் ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் அணியில் இணைந்தும் கூட மூன்றாவது போட்டியில் ஆடவில்லை. எனவே ஷமிக்கு பதிலாக கடைசி 2 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அந்த வகையில் இன்றைய போட்டியில் தவானுக்கு பதில் ராகுல், தோனிக்கு பதில் ரிஷப் பண்ட், ஷமிக்கு பதில் புவனேஷ்வர் குமார் ஆகிய மூன்று மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித், ராகுல், கோலி(கேப்டன்), ராயுடு, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ரா. 
 

click me!