ஆர்ச்சரை பற்றி தெரிஞ்சுதான் முதல் பந்தே சிக்ஸர் பறக்கவிட்டேன்..! சூர்யகுமார் யாதவ் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 19, 2021, 6:09 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே, அதுவும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சரின் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு அந்த போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், 3வது போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 4வது டி20 போட்டியில் ஆட வாய்ப்பு பெற்ற சூர்யகுமார் யாதவ், அபாரமாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்து, 31 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசி இந்திய அணி 185 ரன்களை குவிக்க உதவினார்.

அதன்பின்னர் இங்கிலாந்து அணியை 177 ரன்களில் சுருட்டி 8 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் தான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆடினார். ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்ததும் 3ம் வரிசையில் சூர்யகுமார் களத்திற்கு வந்தார். சூர்யகுமார் களத்திற்கு வந்து எதிர்கொண்ட முதல் பந்தை 144 கிமீ வேகத்தில் வீசினார் ஆர்ச்சர். ஆர்ச்சர் ஷார்ட் பிட்ச் பந்தாக 144 கிமீ வேகத்தில் வீசிய அந்த பந்தை  அசால்ட்டாக ஹூக் ஷாட் மூலம் ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு விரட்டி மிரட்டினார் சூர்யகுமார் யாதவ்.

முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய சூர்யகுமாரை இங்கிலாந்து வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாது, கேப்டன் விராட் கோலியும் வியந்தே பார்த்தார்.

இந்நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது குறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், சர்வதேச கிரிக்கெட்டில் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேனை ஆர்ச்சர் பேக்ஃபூட்டில் ஆட தள்ளுவார். இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஐபிஎல்லிலும் அவருக்கு எதிராக நிறைய ஆடியிருக்கிறேன். எனவே அவர் என்ன செய்வார் என்று எனக்கு தெரியும் என்று சூர்யகுமார் தெரிவித்தார்.
 

click me!