IPL 2023: தோனி போன்று யாரும் கிடையாது; எதிர்காலத்தில் யாரும் வரப்போவதும் இல்லை - சுனில் கவாஸ்கர் பாராட்டு!

Published : Apr 17, 2023, 06:47 PM IST
IPL 2023: தோனி போன்று யாரும் கிடையாது; எதிர்காலத்தில் யாரும் வரப்போவதும் இல்லை - சுனில் கவாஸ்கர் பாராட்டு!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம் எஸ் தோனியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். 

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் அதுவும் ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 200ஆவது போட்டியில் பங்கேற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: தன்னை போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ. 50 லட்சத்தில் ஹாஸ்டல் கட்டியுள்ள ரிங்கு சிங்!

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சிஎஸ்கே கேப்டனான எம் எஸ் தோனியை வெகுவாக பாராட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்கு இக்கட்டான சூழலிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று நன்கு தெரியும். இதற்கு தோனியின் கேப்டன்ஷிப் தான் காரணம். அதுமட்டுமின்றி 200 போட்டிகளில் ஒரு அணிக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண பணி கிடையாது.

IPL 2023: சிஎஸ்கே அணிக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கும் கிங் கோலி!

தோனியின் கேப்டன்ஷிப் சற்று வித்தியாசமானதாக இருக்கும். தோனி போன்று யாரும் எந்த கேப்டனும் இருந்ததில்லை. இனி வரும் காலத்தில் தோனியைப் போன்று யாரும் வரப்போவதும் கிடையாது என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

IPL 2023: மும்பை போட்டியில் வீரர்களுக்கு இடையில் வாக்குவாதம்: சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணாவிற்கு அபராதம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav டீம் இந்தியாவுக்கு வந்தா ரொம்ப டேஞ்சர்... பேட்டிங்கையே வீடியோ கேம் மாதிரி விளையாடுறான்..
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்