அவங்க 2 பேரையும் ஓபனிங்ல இறக்குணா வெளங்குமா..? ஓபனிங் ஜோடியை மாற்றுங்க.. கேகேஆர் அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Apr 27, 2021, 5:20 PM IST
Highlights

கேகேஆர் அணி தொடக்க ஜோடியை கண்டிப்பாக மாற்றியே தீரவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், அவரே தொடக்க ஜோடியை பரிந்துரையும் செய்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் கேகேஆர் அணி இதுவரை சரியாக அமையவில்லை. 6 போட்டிகளில் வெறும் இரண்டே வெற்றிகளை மட்டுமே கேகேஆர் அணி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது.

கேகேஆர் அணி வெற்றி பெற முடியாமல் தவிப்பதற்கு, அந்த அணியின் தொடக்க ஜோடி ஜொலிக்காதது முக்கிய காரணம். இந்த சீசனில் நிதிஷ் ராணா - ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறக்கப்பட்டனர். இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை கேகேஆர் அணிக்கு அமைத்து கொடுக்கவில்லை.

நிதிஷ் ராணா ஒரு போட்டியில் மட்டும் நன்றாக ஆடினார். ஆனால் ஷுப்மன் கில் அதுகூட ஆடவில்லை. இருவரும் இணைந்து மோசமான தொடக்கத்தையே இதுவரை அமைத்துள்ளனர். கில் 6 போட்டிகளில் ஆடி 89 ரன்களையும், ராணா 6 போட்டிகளில் ஆடி 166 ரன்களையும் அடித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த போட்டியிலும் கில்லும் ராணாவும்  சொதப்பிய நிலையில், கேகேஆர் அணி தொடக்க ஜோடியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், நிதிஷ் ராணா கேகேஆர் அணிக்காக 3ம் வரிசையில் இறங்கி சிறப்பாக ஆடியிருக்கிறார். ராகுல் திரிபாதி ஓபனிங்கில் இறங்கிய அனுபவம் இருப்பவர். ஷுப்மன் கில்லுடன் சுனில் நரைனை தொடக்க வீரராக இறக்கலாம் என்று கேகேஆர் அணி நினைக்கலாம். ஆனால் கில்லும் திணறிவருகிறார். எனவே ராகுல் திரிபாதி மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக இறக்கலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!