கில், தவான் அபார பேட்டிங்.. விக்கெட்டே இழக்காமல் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவை ஊதித்தள்ளிய இந்தியா

By karthikeyan VFirst Published Aug 18, 2022, 6:42 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 190 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு தயாராகிவருவதால், கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் ஜிம்பாப்வே தொடரில் ஆடுகிறது.

ஹராரேவில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

இதையும் படிங்க - இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக பக்கா பிளானுடன் சிறப்பாக செயல்படும் ரோஹித் - டிராவிட் கூட்டணி

ஜிம்பாப்வே அணி:

மருமாணி, இன்னசெண்ட் கையா, சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதவெரெ, சிக்கந்தர் ராஜா, ரெஜிஸ் சகாப்வா (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் இவான்ஸ், விக்டர் நியூயாச்சி, ரிச்சர்ட் கராவா.

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் டாப் 3 வீரர்களையுமே ஒற்றை இலக்கத்தில் வீழ்த்தி அசத்தீனார் தீபக் சாஹர். 4ம் வரிசையில் இறங்கிய சீன் வில்லியம்ஸை ஒரு ரன்னில் முகமது சிராஜ் வீழ்த்த, சிக்கந்தர் ராஜாவை 12 ரன்னில் பிரசித் கிருஷ்ணாவும் வீழ்த்தினார். 

பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் அடித்த கேப்டன் சகாப்வாவை அக்ஸர் படேல் வீழ்த்த, 110 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜிம்பாப்வே அணியின் டெய்லெண்டர்களான இவான்ஸ் மற்றும் ரிச்சர்டு ஆகிய இருவரும் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடி 9வது விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர். இவான்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் அடிக்க, அவர்களது பொறுப்பான பேட்டிங்கால் 189 ரன்களையாவது எட்டியது ஜிம்பாப்வே அணி.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

40.3 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து 190 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்தனர். கில் - தவான் இணைந்து விக்கெட் இழப்பின்றி 31வது ஓவரிலேயே இலக்கை அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.

கில் 72 பந்தில் 82 ரன்களும், தவான் 112 பந்தில் 81 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
 

click me!