அவரு விஷயத்துல அவசரப்படாம பொறுத்திருந்து பாருங்க.. சரியான நேரத்துல வெகுண்டெழுந்து சும்மா தெறிக்கவிடுவாரு

By karthikeyan VFirst Published Jun 26, 2019, 12:38 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது. 
 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது. 

உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தோனி. கடந்த ஆண்டு முழுவதும் மோசமாக ஆடி விமர்சனங்களை சந்தித்துவந்த தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஃபார்முக்கு வந்து ஹாட்ரிக் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். தோனியின் ஃபார்ம் இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தது. 

தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதால் உலக கோப்பையில் அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்தினார். ஆனால் உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. இதுவரை 4 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 90 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடி, 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். 

தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் மந்தமான ஆட்டம் குறித்த அதிருப்தியை சச்சின் டெண்டுல்கரே வெளிப்படுத்தியிருந்தார். தோனியின் மந்தமான பேட்டிங்கை ரசிகர்களும் விமர்சித்தனர். 

இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு  தலைவருமான சந்தீப் பாட்டில் குரல் கொடுத்துள்ளார். தோனி குறித்து ஊடகம் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில், தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுகிறது. அவசரப்படாமல் பொறுத்திருந்து பாருங்கள். தோனி விஷயத்தில் அவசரப்படக்கூடாது. தோனியை எனக்கு பிடிக்கும் என்பதால் நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறேன் என சிலர் கூறுகிறார்கள். தோனியை எனக்கு பிடிக்கும். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர் மீது உள்ள நம்பிக்கையை விட அவரது பேட்டிங் திறமை மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. 

தோனி ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் இல்லை. கேப்டன் மற்றும் பவுலர்களுக்கு இக்கட்டான நேரத்தில் ஆலோசனைகள் வழங்குவது, ஃபீல்டிங் செட்டப்பில் உதவுவது என அணியில் முக்கிய பங்காற்றுகிறார். அவரது ஆலோசனைகளை கேட்டு செயல்படுவதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்துக்கின்றனர் பவுலர்கள். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி மந்தமாக ஆடினார் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் அந்த சூழலுக்கு ஏற்பவும் ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் ஆடினார் தோனி. கோலி உள்ளிட்ட முக்கியமான நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், பொறுப்புடன் ஆடினார்கள் தோனியும் கேதரும். 

தோனி விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். தோனி ஒருபோதும் பின்னடைவை சந்திக்க மாட்டார். இந்திய அணியையும் ரசிகர்களையும் ஏமாற்றவும் மாட்டார்.  அவர் சரியான நேரத்தில் வெகுண்டெழுவார் என்று சந்தீப் பாட்டில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

click me!