Fake, Deep Fake Video – தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – சச்சின் ஆதங்கம்!

Published : Jan 15, 2024, 03:15 PM ISTUpdated : Jan 15, 2024, 03:17 PM IST
Fake, Deep Fake Video – தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – சச்சின் ஆதங்கம்!

சுருக்கம்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவதற்காக தனது குரல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் டெண்டுல்கர் ஒரு ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவதைக் காணலாம். கேமில் கணிப்புகளைச் செய்து மகள் சாரா ஒரு நாளைக்கு ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறார் என்று கூறப்பட்டது.

ஒரு வெற்றிக்கு பிறகு மீண்டும் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ் – 9 தோல்வியுடன் 11ஆவது இடம்!

இந்த வீடியோ வெளியான பிறகு சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவிற்கும், தனக்கு எந்த தொடர்பும் இல்லை. அது போலியானவை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறியிருப்பதாவது: "தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதை" கண்டு கலங்கினேன். மேலும், "தவறான தகவல் மற்றும் ஆழமான போலிகள் பரவுவதை" நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Rohit Sharma Captain: ஒரு கேப்டனாக குறைவான போட்டியிலேயே தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

“இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் ஆழமான போலிகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது, ”என்று சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் சமூக ஊடக இடுகையில் கூறினார்.

Fan Touch Virat Kohli Feet: விராட் கோலியின் காலில் விழுந்து கட்டியணைத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோவில் சச்சின் தனது பதிவின் மூலமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மகாராஷ்டிரா சைபர் கிரைம் ஆகியோரையும் எச்சரித்தார். டிசம்பர் 2023 இல் ஒரு ஆய்வின்படி, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் மோசடியால் பாதிக்கப்படும் ஆசியாவின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!