MIW vs RCBW: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆர்சிபி – இறுதிப் போட்டிக்கு மும்பைக்கு வாய்ப்பு?

Published : Mar 15, 2024, 08:31 PM IST
MIW vs RCBW: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆர்சிபி – இறுதிப் போட்டிக்கு மும்பைக்கு வாய்ப்பு?

சுருக்கம்

மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தடுமாறி வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே ஷோஃபி டிவைன் 10 ரன்களில் ஹேலி மேத்யூஸ் பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்த ஓவரின் 2.2 பந்திலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களில் நாட் ஷிவர் பிரண்ட் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திசா கசாட் ரன் ஏதும் எடுக்காமலும், ரிச்சா கோஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது வரையில் ஆர்சிபி அணியானது 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.

 

மும்பை இந்தியன்ஸ் மகளிர்:

ஹேலி மேத்யூஸ், யாஷ்திகா பாட்டீயா, நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், சஜீவன் சஞ்சனா, ஹூமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி மோலினெக்ஸ், எல்லிஸ் பெர்ரி, ஷோஃபி டிவைன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வார்காம், திஷா கஸாட், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாகூர் சிங்.

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 3 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடிய மும்பை 1ல் வெற்றியும், ஒரு போட்டியில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!
கேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு ஏலம்.. ஆனால் கைக்கு ரூ.18 கோடி தான் கிடைக்கும்.. ஏன் தெரியுமா?