டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ரோஹித் - கோலி - ராகுல்

By karthikeyan VFirst Published Dec 12, 2019, 4:09 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் இணைந்து அபார சாதனை படைத்தனர். 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், மும்பை வான்கடேவில் நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினர். முதல் சில ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியிடமிருந்து போட்டியை பறித்தது இந்திய அணி. அதற்குக் காரணம், இந்திய தொடக்க வீரர்கள். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 135 ரன்களை சேர்த்து மிகச்சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 34 பந்தில் 71 ரன்களை குவித்தார். அவர் விட்ட  இடத்திலிருந்தே அவரை விட மிரட்டலாக தொடர்ந்த கோலி, வழக்கத்திற்கு மாறாக சிக்ஸர் மழை பொழிந்தார். 

21 பந்தில் அரைசதம் அடித்த கோலி, 29 பந்தில் 70 ரன்களை குவித்தார். ராகுல் 91 ரன்களை குவிக்க, இந்திய அணி 240 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 200 ரன்கள் கூட மும்பை வான்கடேவில் எட்டக்கூடிய இலக்கு என்பதால் முடிந்தவரை அதிகமான ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தொடக்கம் முதலே அடித்து ஆடிய இந்திய அணி 240 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை 173 ரன்களுக்கு சுருட்டி 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா 71 ரன்கள், விராட் கோலி 70 ரன்கள் மற்றும் ராகுல் 91 ரன்களை குவித்தனர். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் 70 ரன்களுக்கு மேல் அடித்தது இதுதான் முதல்முறை. இதுவரை டி20 கிரிக்கெட்டில் எந்த அணியின் மூன்று வீரர்களும் 70 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை. 
 

click me!