#INDvsENG இங்கிலாந்தை அச்சுறுத்தும் ரோஹித் - கோலி பார்ட்னர்ஷிப்..! ஹிட்மேன் அரைசதம்

By karthikeyan VFirst Published Feb 24, 2021, 9:57 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 112 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிவருகிறது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 112 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி மட்டுமே அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடி 84 பந்தில் 53 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே அக்ஸர் படேல் மற்றும் அஷ்வினின் சுழலில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அக்ஸர் படேல் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, 112 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து அணி.

முதல் நாள் ஆட்டத்தின் 2வது செசனிலேயே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாக, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2வது செசனை விக்கெட்டே இல்லாமல் முடித்தது. 3வது செசனிலும் ரோஹித்தும் கில்லும் சிறப்பாகவே ஆடினர். 49 பந்துகள் களத்தில் ஆடிவிட்ட கில், ஆர்ச்சர் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பவுன்ஸராக வீசிய பந்தை கில் புல் ஷாட் ஆட முயல, அது டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. 50 பந்தில் 11 ரன்கள் அடித்து கில் ஆட்டமிழந்தார்.

புஜாரா லீச்சின் பந்தில் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, இந்திய அணி  34 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரோஹித்துடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கினாலும், களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து கோலியும் சிறப்பாக ஆட, ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனது. 34 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ரோஹித்தும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆட, அதன்பின்னர் விக்கெட்டே விழாமல் இந்திய அணி 90 ரன்களை கடந்துவிட்டது. சீனியர் வீரர்கள் இருவரும் நிலைத்து ஆடிவருவதால் இங்கிலாந்து அணி பெரும் அழுத்தத்தில் உள்ளது.
 

click me!