ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?

Published : Jun 08, 2023, 10:27 AM IST
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?

சுருக்கம்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி கொடுத்ததாக செய்தி பரவி வருகிறது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒடிசா விபத்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சினிமா, கிரிக்கெட், அரசியல் தலைவர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தனது பார்ட்னரை சந்திக்கவே இல்லை – சுப்மன் கில் உடனான காதல், டேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அலி கான்!

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் இந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளார். அந்தக் குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இலவச கல்வியை வழங்குகிறேன் என்று கூறியுள்ளார். இதே போன்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்கவுட் கேமிங் சேனல் ஏற்பாடு செய்தது. அந்த சேனல் மூலமாக சாஹல் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்னுமே பண்ணமுடியாமல் திணறிய இந்தியா: 47 பவுண்டரி, ஒரு சிக்சர்: முதல் நாளில் 327 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

 

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 கோடி நிதியுதவி அளித்ததாக செய்திகள் வெளியாகின. உண்மையில், அவர் அப்படி ஏதும் நிதியுதவி அளிக்கவில்லை. மாறாக டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. துக்கத்தில் வாடும் குடும்பங்களுக்கு கடவுள் பலம் தரட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

WTC Final-லில் முதல் வீரராக சதம் அடித்து சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்; 22 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 146 ரன்கள்!

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!