
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் அவரது தங்கச்சி திருமணத்திற்காக சென்றிருப்பதால், முதல் போட்டியில் ஆடமாட்டார். எனவே மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன், மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக இறங்கவேண்டும். நாளை முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால் இன்னும் குவாரண்டினை முடிக்கவில்லை. எனவே என்னுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்குவார். அவர் ஒருவர் தான் இப்போதைக்கு தொடக்க வீரராக ஆடமுடியும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.