ஐபிஎல் ஒப்பந்த விதிகளை மீறிட்டீங்க..! ஆர்சிபி வீரருக்கு கடும் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published May 1, 2021, 8:04 PM IST
Highlights

ஐபிஎல் ஒப்பந்த விதியை மீறியதற்காக ஆர்சிபி வீரர் டேனியல் கிறிஸ்டியனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் நன்றாக ஆடிவருகிறது ஆர்சிபி அணி. வழக்கத்திற்கு மாறாக தொடர் வெற்றிகளை புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களில் நிரந்தரமாக நீடிக்கிறது. 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான டேனியல் கிறிஸ்டியன் ஆர்சிபி அணியில் ஆடிவருகிறார். இந்நிலையில், தி கிரேட்(grade) கிரிக்கெட்டர்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் டேனியல் கிறிஸ்டியன். 

அந்த பேட்டியில், வலைப்பயிற்சியில் டியூக் பந்தில் தனக்கு பந்துவீச முடியுமா என கைல் ஜாமிசனிடம் விராட் கோலி கேட்டதாகவும், அதை ஜாமிசன் மறுத்ததாகவும் கிறிஸ்டியன் தெரிவித்திருந்தது செமயாக வைரலானது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவுள்ள நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் முக்கிய ஃபாஸ்ட் பவுலரான ஜாமிசன், ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் விதமாக ஜாமிசனிடம் பயிற்சியில் பந்துவீசுமாறு கோலி கேட்டுள்ளார். கோலி அப்படி கேட்டதாகவும், ஜாமிசன் மறுத்ததாகவும் கிறிஸ்டியன் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் ஒப்பந்த விதிகளை மீறி மீடியாவுக்கு பேட்டி கொடுத்தது விதிமீறல் என்பதால், கிறிஸ்டியனை ஆர்சிபி அணி எச்சரித்தது. அதன்விளைவாக, அந்த வீடியோவை நீக்குமாறு கிறிஸ்டியன் வேண்டிக்கொண்டதற்கிணங்க, அந்த பேட்டி வீடியோ யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 

click me!