
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.
எனவே 2வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி.
இந்நிலையில், தான் அணியில் எடுக்கப்படாதது குறித்து பேசியுள்ள அஷ்வின், 2வது டெஸ்ட்டில் நான் ஆடுவதாக இருந்தது. அந்த போட்டியில் நான் ஆடுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக திடீரென மழை பெய்துவிட்டதால், கண்டிஷனை கருத்தில் கொண்டு 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆட வேண்டியதாயிற்று என்று அஷ்வின் தெரிவித்தார்.
ஆனால் அதன்பின்னர் அந்த போட்டியில் மழை இல்லை. கடைசி 2 நாட்கள் பிட்ச் வறண்டு, ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக கடைசி நாள் பிட்ச் ஸ்பின்னிற்கு நல்ல சாதகமாகவே இருந்தது. அஷ்வின் ஆடியிருந்தால், 120 ரன்களுக்கு முன்பாகவே இங்கிலாந்தை ஆல் அவுட் செய்திருக்கும் வாய்ப்பு கூட இருந்தது.