ராகுல் சார் கோச்சிங்ல ஆடுறதே தனி சந்தோஷம் தான்..! பிரித்வி ஷா செம உற்சாகம்

By karthikeyan VFirst Published Jul 5, 2021, 9:08 PM IST
Highlights

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆடுவதே தனி சந்தோஷம் தான் என்று இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய மெயின் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. 

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருந்ததால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் புவனேஷ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.

இந்த வீரர்களில் பெரும்பாலானோர் ராகுல் டிராவிட் அண்டர் 19 இந்திய அணி மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தபோது அவர்கள் உருவாக்கிய வீரர்கள் தான் இந்த இலங்கை தொடரில் ஆடுகிறார்கள். 

அந்தவகையில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் 2018 அண்டர் 19 உலக கோப்பையில் ஆடி கோப்பை வென்ற அணியின் கேப்டன் பிரித்வி ஷா இந்த இலங்கை தொடரிலும் ஆடும் நிலையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆடுவது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் பேசியுள்ள பிரித்வி ஷா, ராகுல் சாரின் பயிற்சியின் கீழ் ஆடுவது தனி சந்தோஷம் தான். அவர் பேசும் விதம், அவரது பயிற்சி அனுபவங்களை பகிர்வது எல்லாம் அபாரமாக இருக்கும். ஆட்டத்தை பற்றி அவர் பேசும்போதெல்லாம் அவரது அனுபவம் மொத்தத்தையும் நமக்கு வழங்குவார். கிரிக்கெட்டை பற்றி அனைத்துமே அவருக்கு தெரியும். ஆடும் கண்டிஷனை பற்றி அவர் பேசுவதும், அந்த கண்டிஷனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறுவதும் சிறப்பாக இருக்கும்.

ராகுல் சார் இருக்கும்போது டிரெஸிங் ரூமில் ஒழுக்கம் கண்டிப்பாக இருக்கும். ராகுல் சாருடனான பயிற்சி செசன்களை எதிர்நோக்கியிருக்கிறேன். மணிக்கணக்கில் அவருடன் பேச எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த தொடரில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றார் பிரித்வி ஷா.
 

click me!