ஒருநாள் அவகாசம் கேட்ட ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் – மின் கட்டணம் செலுத்ததால் இருட்டில் மூழ்கிய மைதானம்!

Published : Apr 05, 2024, 02:43 PM IST
ஒருநாள் அவகாசம் கேட்ட ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் – மின் கட்டணம் செலுத்ததால் இருட்டில் மூழ்கிய மைதானம்!

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மின் விநியோகம் நிறுத்தம் காரணமாக இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐபிஎல் 2024 தொடரின் 18ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் இந்தப் போட்டி நடைபெறுவதில் புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்துவதில் சில கோடி பாக்கி வைத்துள்ளது.

அதில் பாதி தொகையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தி ரூ.1.63 கோடியை பாக்கி வைத்துள்ளது. எஞ்சிய தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மின் துணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தியின் போது பணம் செலுத்த ஒருநாள் கால அவகாசம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மைதானத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக கிரிக்கெட் வாரிய அமைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இன்றைய போட்டியில் சிக்கல் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

CSK-வுக்கு பெரிய அடி.. IPL-ல் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்.. மாற்று வீரர் யார்? புதிய அப்டேட்!
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!