நீங்க வேணா பாருங்க.. உலக கோப்பையில் அந்த பையன் கண்டிப்பா ஆடுவான்!! அடித்து சொல்லும் ஆஷிஷ் நெஹ்ரா

By karthikeyan VFirst Published Apr 19, 2019, 4:21 PM IST
Highlights

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்கள் தான் இழுபறியாக இருந்தது. கடைசியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக யாரையுமே தேர்வு செய்யவில்லை. நான்காம் வரிசை வீரராக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைப்பதுடன் அவர் நல்ல ஃபீல்டரும் கூட என்பதால் அவரை அணியில் எடுத்துள்ளனர். அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் எடுக்கப்படுவார் என கருதப்பட்ட நிலையில், அனுபவ விக்கெட் கீப்பர் என்ற வகையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால், கண்டிப்பாக நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் செல்ல வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் அறிவுறுத்தினர். அதனால் தீபக் சாஹர் அல்லது நவ்தீப் சைனி ஆகிய இருவரில் ஒருவர் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் இணைந்து நான்காவது ஃபாஸ்ட் பவுலருக்கான பணியை செய்துவிடுவர் என்ற நம்பிக்கையில், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் எடுக்கப்படவில்லை. 


 
அதேநேரத்தில் ஸ்டாண்ட்பை வீரர்களாக ராயுடு, ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூவரில் ஒருவருக்கு, தொடரின் இடையில் காயம் ஏற்பட்டு ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் சைனி வாய்ப்பை பெறுவார். 

நவ்தீப் சைனி ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசிவருகிறார். உலக கோப்பை அணியில் ஸ்டாண்ட்பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே ஏதேனும் ஒரு ஃபாஸ்ட் பவுலர் காயத்தால் ஆடமுடியாமல் போனால், அவர்களுக்கு மாற்றாக சைனி மட்டுமே இருப்பதால், சைனி கண்டிப்பாக உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெறுவார் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!