MIW vs RCBW: வெளியேறப்போவது யார்? 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லுமா மும்பை?

Published : Mar 15, 2024, 11:40 AM IST
MIW vs RCBW: வெளியேறப்போவது யார்? 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லுமா மும்பை?

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் வழக்கம் போல் குஜராத் ஜெயிண்ட்ஸ் வெளியேற்விட்டது. கடந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற யுபி வாரியர்ஸ் இந்த சீசனில் 2ஆவது அணியாக தொடரிலிருந்து வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பெற்றுள்ளது. அதோடு, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் சீசனிலும் டெல்லி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முனேறியது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் இறுதிப் போடிக்கு செல்லும் அணிக்கான போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி டெல்லியுடன் இறுதிப் போட்டியில் மோதும். தோல்வி அடையும் அணி எலிமினேட் ஆகும். கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட வராமல் வெளியேறிய ஆர்சிபி அணி இந்த சீசனில் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் டெல்லியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இதுவே ஆர்சிபி வெற்றி பெற்றால் டெல்லியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி
சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?