ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த மைக்கேல் வான் கொடுக்கும் பலே ஐடியா..!

By karthikeyan VFirst Published May 21, 2021, 6:04 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தி முடிக்க இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆலோசனை கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய 31 போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், இங்கிலாந்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. 

அதில் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 14ம் தேதி தான் முடிகிறது. அதன்பின்னர் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், ஐபிஎல்லை நடத்த ஏதுவாக கடைசி டெஸ்ட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே திரைமறைவு பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் தொடரை முழுமையாக முடித்துவிட்டு ஐபிஎல்லை ஆடுவதற்கான ஆலோசனை கூறியுள்ளார் மைக்கேல் வான். இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டை முன்கூட்டியே தொடங்கினால், டெஸ்ட் தொடர் முன்கூட்டியே முடிந்துவிடும். அதன்பின்னர் ஐபிஎல்லை நடத்தலாம் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.
 

click me!