#ENGvsIND கேஎல் ராகுலின் சாதனை சதத்தால் மெகா ஸ்கோரை நோக்கி இந்தியா..! பீதியில் இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Aug 13, 2021, 2:41 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் கேஎல் ராகுலின் அபார சதம் மற்றும் ரோஹித் சர்மாவின் அதிரடியான பேட்டிங்கால் மெகா ஸ்கோரை நோக்கி செல்கிறது இந்திய அண்
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்துள்ளது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா களத்தில் கொஞ்சம் செட்டில் ஆனபின்னர், அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். அடித்து ஆடிய ரோஹித் சர்மா 83 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

புஜாரா 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆடியபோது, களத்தில் நிதானம் காத்து ஆடிய ராகுல், நன்றாக செட்டில் ஆனார். ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, அதிரடியாக ஆட ஆரம்பித்த ராகுல் சதமடித்தார். ராகுலுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கோலி, அரைசதத்தை 8 ரன்னில் தவறவிட்டு 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அபாரமாக ஆடிய ராகுல் 127 ரன்களுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது. சதமடித்த ராகுல் களத்தில் இருக்கிறார். ரஹானே, ரிஷப், ஜடேஜா என இன்னும் பேட்டிங் ஆர்டர் நீளமாக இருப்பதால், அவர்களில் ஒன்றிரண்டு பேர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் கூட, இந்திய அணி மெகா ஸ்கோரை அடித்துவிடும்.

ராகுல் இந்த சதத்தின் மூலம் சாதனைகளை படைத்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் வினூ மன்கத் மற்றும்  ரவி சாஸ்திரிக்கு அடுத்து சதமடித்த இந்திய தொடக்க வீரர் ராகுல் தான். மேலும் ஆசியாவுக்கு வெளியே டெஸ்ட்டில் 3 சதமடித்துள்ளார் இந்தியாவின் தொடக்க வீரர் ராகுல் தான். ராகுலின் இந்த சாதனை சதத்தால் இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி செல்கிறது.
 

click me!