RCB vs KKR:ஹசரங்காவிடம் சரணடைந்த கேகேஆர் வீரர்கள்! தட்டுத்தடுமாறி 128 ரன்கள் அடித்தது; ஆர்சிபிக்கு எளிய இலக்கு

Published : Mar 30, 2022, 09:31 PM IST
RCB vs KKR:ஹசரங்காவிடம் சரணடைந்த கேகேஆர் வீரர்கள்! தட்டுத்தடுமாறி 128 ரன்கள் அடித்தது; ஆர்சிபிக்கு எளிய இலக்கு

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்து 129 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ்  ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் ஆடியது. அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவிக்கு பதிலாக டிம் சௌதி சேர்க்கப்பட்டார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயரை(10) ஆகாஷ் தீப்பும், அஜிங்க்யா ரஹானேவை (9) முகமது சிராஜும் வீழ்த்தினர். அதன்பின்னர் கேகேஆர் அணியின் மிடில் ஆர்டரை ஆர்சிபி ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா சரித்தார். கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (13)  மற்றும் சுனில் நரைன் (12) ஆகிய இருவரையும் ஹசரங்கா வீழ்த்த, நிதிஷ் ராணாவை (10) ஆகாஷ் தீப் மற்றும் சாம் பில்லிங்ஸை (14) ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் வீழ்த்தினர்.

ஷெல்டான் ஜாக்சனை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பிய ஹசரங்கா, டிம் சௌதியை ஒரு ரன்னில் வெளியேற்றினார். வழக்கம்போலவே தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடி ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசிய ஆண்ட்ரே ரசல் 18 பந்தில் 25 ரன்கள் அடித்த நிலையில் ஹர்ஷல் படேலின் சாமர்த்தியமான பவுலிங்கில் வீழ்ந்தார். டெயிலெண்டர் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 12 பந்தில் 18 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த கேகேஆர் அணி, 18.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

129 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபி அணி விரட்டிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!