இயன் மோர்கனுக்கு தடை.. இங்கிலாந்து கேப்டன் யார் தெரியுமா..?

Published : May 17, 2019, 01:31 PM IST
இயன் மோர்கனுக்கு தடை.. இங்கிலாந்து கேப்டன் யார் தெரியுமா..?

சுருக்கம்

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.   

உலக கோப்பை 3ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் பந்துவீச இங்கிலாந்து அணி அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டிற்குள்ளாக மீண்டும் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஆட ஐசிசி தடை விதித்துள்ளது. மேலும் இயன் மோர்கனுக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவிகிதமும் மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டது. 

அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டிரெண்ட் பிரிட்ஜில் இன்று நடக்கும் நான்காவது போட்டியில் இயன் மோர்கன் ஆடமாட்டார். அதனால் ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. அதேபோல கடந்த போட்டியில் சதமடித்த பேர்ஸ்டோ, வலைப்பயிற்சியில் ஈடுபடாததால் இன்றைய போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!