உலக கோப்பையில் இவருதான் ஹீரோ.. தனது வேகத்தால் எதிரணிகளை எரிக்கப்போறாரு.. ஃபாஸ்ட் பவுலருக்கு கெத்தை ஏற்றிவிட்ட முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published May 21, 2019, 12:18 PM IST
Highlights

இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரியே தெரிவித்திருக்கிறார். 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என்பதே பெரும்பாலான ஜாம்பவான்களின் கணிப்பு. 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரியே தெரிவித்திருக்கிறார். 

எனவே இந்த உலக கோப்பை ஒரு ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக அமைய உள்ளது தெளிவாகிவிட்டது. இப்படியான ஹை ஸ்கோரிங் தொடரில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் ஸ்கோரை முடிந்தவரை கட்டுப்படுத்துவது அவசியம். அந்த வகையில் இந்திய அணி இந்த உலக கோப்பையின் சிறந்த அணிதான். 

இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தொடக்க மற்றும் டெத் ஓவர்களை பும்ரா பார்த்துக்கொள்வார். மிடில் ஓவர்களில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் வரிசையை சரித்துவிடுவர். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. 

உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா, தொடக்கத்திலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக வீசக்கூடியவர். பும்ரா தான் இந்தியாவுக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைவார் என்பதில் ஆச்சரியமில்லை. அவரது வேகத்தையும் வேரியேஷனையும் சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறுகின்றனர்.

உலக கோப்பையில் பும்ரா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து முக்கிய பங்காற்றவுள்ளார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை. இந்நிலையில், பும்ராவை வெகுவாக புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜெஃப் தாம்சன். 

பும்ரா குறித்து பேசிய ஜெஃப் தாம்சன், எதிரணிகளை தனது வேகத்தால் எரிக்கவல்லவர் பும்ரா. அவரது பவுலிங்கை கணிப்பது கடினம். பும்ராவின் பவுலிங்கை இதுவரை எந்த பேட்ஸ்மேனும் கணிக்கவில்லை. அவர் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை பெற்றிருப்பதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என்று ஜெஃப் தாம்சன் தெரிவித்துள்ளார். 
 

click me!