எல்லாமே வெறும் ஊகம்தான்.. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரும்பாத ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Aug 3, 2019, 11:07 AM IST
Highlights

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது. ஏராளமான முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளராக நீண்ட நெடிய அனுபவம் கொண்ட டாம் மூடி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங்கும் விண்ணப்பித்துள்ளார். 

நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான மைக் ஹெசனும் விண்ணப்பித்துள்ளார். இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் ஜெயவர்தனே அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். 
 

click me!